Sunday 24 June 2012

சொல்லாமலே உணர்ந்து,குறை தீர்த்து ஆசிக்கும் கருணை காஞ்சி மஹான்


எனது ஆசான் சுப்ரமணியன் ராமபிரான் மீது அழ்ந்த பக்தி உடையவர். பள்ளி செல்லும் நாட்களில் தொடங்கி இன்றும் (வயது92) தினமும் 1008 முறை "ஸ்ரீராமஜெயம்" எழுதாமல் தூங்கமாட்டார். 
அவரிடம் டியூசன் படித்துகொண்டிருந்த மாணவர் ஒருவர் எப்போதும் சோகத்துடன் இருந்ததை பார்த்து அவர் காரணம் கேட்க, "தன் சகோதரியின் திருமணம் நீண்ட நாட்களாக தள்ளி போய் கொண்டிருப்பதால் வீட்டில் உள்ள அனைவரும் கவலையுடன் இருக்கிறோம். மேலும் கோயில், பரிகாரபூஜை என வேண்டாததெய்வங்கள் இல்லை" என்றான் மாணவன்.
உடனே ஆசிரியர், "நாம் இருவரும் காஞ்சிபுரம் சென்று மகாபெரியவரை பார்த்து ஆசிபெற்று வருவோம். நிச்சயம் ஒரு தீர்வு கிட்டும்" என்றார் .
புறப்படும்போது ஆசான் கிட்டதட்ட இரண்டு லட்சம் தடவைக்கு மேல் ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டு புத்தகங்களை கட்டி தன்னுடன் எடுத்துகொண்டார்.
இருவரும் காஞ்சி சங்கர மடத்தை அடைந்தனர். அவர்கள் போன சமயம் பெரியவாள் பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்தார். 
மகாசுவாமிகளை பார்க்கும்போது என்னென்ன அவரிடம் கேட்க வேண்டும் என்பதை தயார் செய்து வைத்திருந்தனர்.
தங்களை அழைத்தவுடன் ராமஜெயம் எழுதிய நோட்டு புத்தகங்களை அவர் முன் வைத்தனர். பரமாச்சாரியார், "என்ன இது" என வினவினார். இரண்டு லட்சம் ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டுகள் என்றவுடன் ஆச்சாரியார் முகத்தில் புன்னகையுடன் கலந்த மகிழ்ச்சி அரும்பியது. அருகில் இருந்த மாலையை அந்த புத்தகங்கள் மீது போட்டார். பின் இருவருக்கும் ஆரஞ்சு மற்றும் பூ மாலையை கொடுத்து ஆசீர்வதித்தார்.
எதிர்பாராமல் கிடைத்த இப்பேறு வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். எனவே, இருவரும் திக்குமுக்காடி போய்விட்டனர்.
வெளியே வந்ததும் மாணவர், "ஒன்றுமே கேட்காமல் வந்து விட்டோமே? எனப் பதற்றமாக கேட்டார். அதற்கு ஆசான், "நாம் எதற்கு வந்திருக்கின்றோம், என்ன கோரிக்கை என்பதெலாம் பெரியவாளுக்கு தெரிந்திருக்கும். கவலைபடாமல் திரும்பி செல்வோம். எல்லாம் நல்லதே நடக்கும்," என்றார் .
என்ன ஆச்சரியம்! அடுத்த வாரமே அந்த மாணவனின் அக்காளுக்கு ஒரு நல்ல வரன் அமைந்து விரைவிலேயே திருமணமும் சிறப்புற நிறைவேறியது. தம்பதியினர் ஆச்சாரியாளிடம் நேரில் சென்று ஆசி பெற்று புது வாழ்வைத் தொடங்கி இன்று குழந்தை செல்வங்களுடன் இனிதே வாழ்ந்து வருகின்றனர்.
சொல்லாமல் உணர்த்தும் தட்சிணாமூர்த்தியைப் போல தன்னிடம் வருவோர் சொல்லாமலே உணர்ந்து அவர்களின் குறைகளை தீர்த்து வைத்திட்ட பெரியவாளின் ஆசிக்கும் கருணைக்கும் எல்லையை இல்லை.

கல்யாணத்திற்கு பணம்...பெரியவா கருணை


 
பல வருடங்களுக்கு முன் கரூரைப் பூர்விகமாகக் கொண்டராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்தார்அவர் மனைவி தர்மாம்பாள்ஒரே  மகள் காமாட்சி.

அவர் வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் வைதீகத்தை வயிற்றுப் பிழைப்பாகாக் கொள்ளவில்லைஉபன்யாசம் பண்ணுவதில் கெட்டிக்காரர்அதில்அவர்களாகப் பார்த்து அளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்வார்ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளிடம் மிகுந்த விசுவாசமும் பக்தியும் உள்ள குடும்பம்.

 இருபத்திரண்டு வயதான காமாட்சிக்குத் திடீரெனத் திருமணம் நிச்சயமானது.  ஒரு மாதத்தில் திருமணம்மணமகன் ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர்.

தர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள், "பொண்ணுக்குக்கல்யாணம் நிச்சியமாயிடுத்துகையிலே எவ்வளவு சேர்த்து வெச்சிண்டிருக்கேள்?" கனபாடிகள் பவ்யமாக, "தாமுஒனக்குத் தெரியாதா என்ன?  
இதுவரைக்கும் அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்துவெச்சிருக்கேன். சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமேஎன்று சொல்ல,   ர்மாம்பாளுக்குக் கோபம் வந்துவிட்டது.
"அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப் பண்ண முடியும்நகைநட்டு,  சீர்செனத்திபொடவைதுணிமணி வாங்கிசாப்பாடுபோட்டு எப்படி கல்யாணத்தை நடத்த முடியும்இன்னும் பதினையாயிரம்  ரூவா கண்டிப்பா வேணும்ஏற்பாடு பண்ணுங்கோ!" இது தர்மாம்பாள்.

இடிந்து போய் நின்றார் ராமநாத கனபாடிகள்.

உடனே தர்மாம்பாள், "ஒரு வழி இருக்குசொல்றேன்கேளுங்கோ 
கல்யாணப்  பத்திரிகையைக் கையிலே எடுத்துக்குங்கோகொஞ்சம்பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோஅங்கேஸ்ரீமடத்துக்குப் போய் ஒரு தட்டிலே பழங்களை வெச்சுகல்யாணப்பத்திரிகையையும் வெச்சு மகா பெரியவாளை நமஸ்காரம் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்கோபதினைந்தாயிரம் பண ஒத்தாசை கேளுங்கோ... ஒங்களுக்கு 'இல்லே'னு சொல்லமாட்டா பெரியவாஎன்றாள் நம்பிக்கையுடன்.

அவ்வளவுதான்... ராமநாத கனபாடிகளுக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்துவிட்டது.   
"என்ன சொன்னே..  என்ன சொன்னே நீபெரியவாளைப் பார்த்துப் பணம்        கேக்கறதாவது.. என்ன வார்த்தபேசறே நீ"  என்று கனபாடி முடிப்பதற்குள்.....

"ஏன்என்ன தப்புபெரியவா நமக்கெல்லாம் குருதானேகுருவிடம் யாசகம் கேட்டால் என்ன தப்பு?" என்று கேட்டாள் தர்மாம்பாள்.

"என்ன பேசறே தாமுஅவர் ஜகத்குருகுருவிடம் நாம "ஞான"த்தைத்தான் யாசிக்கலாமே தவிர, "தான"த்தை [பணத்தையாசிக்கப்படாதுஎன்று சொல்லிப் பார்த்தார் கனபாடிகள்பயனில்லை 
அடுத்த நாள் "மடிசஞ்சி"யில் [ஆசாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளி்ப்  பைதன் துணிமணிகள் சகிதம் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டுவிட்டார் கனபாடிகள்.
ஸ்ரீமடத்தில் அன்று மகா பெரியவாளைத் தரிசனம் பண்ண ஏகக் கூட்டம்ஒரு மூங்கில் தட்டில் பழம்பத்திரிகையோடு வரிசையில் நின்று கொண்டிருந்தார் ராமாநாத கனபாடிகள்.  நின்றிருந்த அனைவரின்கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்தைக் கனபாடிகள் அடைந்ததும் அவர் கையிலிருந்த பழத்தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாக வாங்கிபத்தோடு பதினொன்றாகத் தள்ளி வைத்துவி்ட்டார்..   
இதைச் சற்றும் எதிர்பார்க்காத கனபாடிகள், "ஐயா...ஐயா... அந்ததட்டிலே  க்ல்யாணப் பத்திரிகை வெச்சிருக்கேன்பெரியவாளிடம் சமர்ப்பிச்சு ஆசி வாங்கணும்அதை இப்படி எடுங்கோஎன்று சொல்லிப் பார்த்தார்யார் காதிலும் விழவில்லை.

அதற்குள் மகா ஸ்வாமிகள்கனபாடிகளைப் பார்த்துவிட்டார்ஸ்வாமிகள் பரம சந்தோஷத்துடன், "அடடே!  நம்ம கரூர் ராமநாதகனபாடிகளாவரணும்.. வரணும்.  ஸ்ரீரங்கத்தில் எல்லோரும் க்ஷேமமாஉபன்யாசமெல்லாம் நன்னா போயிண்டிருக்கா?" என்று  விசாரித்துக்  கொண்டே போனார்.

"எல்லாம் பெரியவா அனுக்கிரகத்துலே நன்னா நடக்கிறதுஎன்று சொல்லியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம்பண்ணி எழுந்தார்உடனே ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, "ஆத்திலே... பேரு என்ன ...ம்.. தர்மாம்பாள்தானேசௌக்யமாஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள்அவரோட அப்பா சுப்ரமண்ய கனபாடிகள்என்ன நான் சொல்ற பேரெல்லாம் சரிதானே?" என்று கேட்டு முடிப்பதற்குள்,  ராமநாத கனபாடிகள்சரிதான் பெரியவாஎன் ஆம்படையா [மனைவிதாமுதான் பெரியவாளைப் பார்த்துட்டு வரச் சொன்னா.."என்று குழறினார்.

"அப்போநீயா வரல்லே?"; இது பெரியவா.

"அப்படி இல்லே பெர்யவாபொண்ணுக்குக் கல்யாணம் வெச்சுருக்குதாமுதான் பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு பத்திரிகையை சமர்ப்பிச்சு.." என்று கனபாடிகள் முடிப்பதற்குள்ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச் சொல்லியிருப்பாஎன்று பூர்த்தி பண்ணிவிட்டார் ஸ்வாமிகள்.

பதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றுபுரியாமல் குழம்பினார் கனபாடிகள்இந்நிலையில் பெரியவா, "உனக்கு ஒரு அஸைன்மெண்ட் வெச்சிருக்கேன்.  நடத்திக்கொடுப்பியா?" என்று கேட்டார்.

"அஸைன்மெண்டுன்னா பெரியவா?" இது கனபாடிகள்.

"செய்து முடிக்கவேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம்எனக்காகப் பண்ணுவியா?"

பெரியவா திடீரென்று இப்படிக் கேட்டவுடன்வந்த விஷயத்தை விட்டு விட்டார் கனபாடிகள்குதூகலத்தோடு, "சொல்லுங்கோ பெரியவாகாத்துண்டிருக்கேன்என்றார்.

உடனே பெரியவா, "ஒனக்கு வேற என்ன அஸைன்மெண்ட் கொடுக்கப் போறேன்உபன்யாசம் பண்றதுதான்திருநெல்வேலி கடையநல்லூர் பக்கத்துல ஒரு அக்ரஹாரம் ரொம்ப மோசமான நிலையில் இருக்காம்பசு மாடெல்லாம் ஊர்ல காரணமில்லாம செத்துப் போய்டறதாம்கேரள நம்பூதிரிகிட்டே ப்ரஸ்னம் பார்த்ததுல, பெருமாள் கோயில்ல "பாகவத உபன்யாசம்பண்ணச் சொன்னாளாம்ரெண்டு நாள் முன்னாடி அந்த ஊர் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் இங்கே வந்தார்விஷயத்தைச் சொல்லிட்டு, "நீங்கதான் ஸ்வாமிபாகவத உபன்யாசம்பண்ண ஒருத்தரை அனுப்பி உதவி பண்ணணும்"னு பொறுப்பை என் தலைல கட்டிட்டுப் போயிட்டார்நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணி்ட்டு வரணும்விவரமெல்லாம் மடத்து மானேஜருக்குத் தெரியும் கேட்டுக்கோ. சிலவுக்கு மடத்துல பணம் வாங்கி்க்கோஇன்னிக்கு ராத்திரியே விழுப்புரத்தில் ரயில் ஏறிடுசம்பாவனை [வெகுமானம்அவாபார்த்துப் பண்ணுவாபோ..போ...போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோஎன்று சொல்லிவிட்டுவேறு ஒரு பக்தரிடம் பேச ஆரம்பித்து விட்டார் ஸ்வாமிகள்.

அன்றிரவு விழுப்புரத்தில் ரயிலேறிய கனபாடிகள் அடுத்த நாள் மதியம் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கினார்பெருமாள் கோயில் பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அழைத்துச் சென்றார்.

ஊருக்குச் சற்று தொலைவில் இருந்தது அந்த வரதராஜப் பெருமாள் கோயில்கோயில்பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார்கனபாடிகள்ஊர் அக்ரஹாரத்திலிருந்து ஓர்  காக்காகூடகனபாடிகளை வந்து பார்க்கவிலை. "உபன்யாசத்தின்போது எல்லோரும்வருவாஎன அவரே தன்னை சமாதானப் படுத்திக் கொண்டார்.

மாலை வேளைவரதராஜப் பெருமாள் சந்நிதி முன் அமர்ந்து ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தைக் காஞ்சி ஆச்சார்யாளை நினைத்துக் கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள்எதிரே ஸ்ரீவரதராஜப் பெருமாள்கோயில் பட்டர்கோயில் மெய்க்காவல்காரர்இவ்வளவு பேர்தான்.
உபன்யாசம் முடிந்ததும், "ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமே வரல்லே?" என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார் கனபாடிகள்.

அதற்கு பட்டர்,"ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டுபட்டுக் கிடக்குஇந்தக் கோயிலுக்கு யார் தர்மகர்த்தாவாக வருவது என்பதிலே ரெண்டு பங்காளிகளுக்குள்ளே சண்டைஅதை முடிவு கட்டிண்டுதான் "கோயிலுக்குள்ளே நுழைவோம்"னு சொல்லிட்டாஉப்ன்யாசத்துக்கு நீங்க வந்திருக்கிற சமயத்துல ஊர் இப்படி ஆயிருக்கேனு ரொம்ப வருத்தப்படறேன்என்று கனபாடிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்கினார்.

பட்டரும்மெய்க்காவலரும்பெருமாளும் மாத்திரம் கேட்க, ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார்ராமநாத கனபாடிகள்பட்டாச்சார்யார் பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணி பிரசாதத் தட்டில் பழங்களுடன் முப்பது ரூபாயை வைத்தார்மெய்க்காவல்காரர் தன் மடியிலிருந்து கொஞ்சம் சில்லரையை எடுத்து அந்தத் தட்டில் போட்டார்பட்டர் ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தைச் சொல்லி சம்பாவனைத் தட்டைக் கனபாடிகளிடம் அளித்து, "ஏதோ இந்த சந்தர்ப்பம் இப்படி ஆயிடுத்துமன்னிக்கணும்ரொம்ப நன்னா ஏழு நாளும் கதை சொன்னேள்எத்தனை ரூவா வேணும்னாலும் சம்பாவனைபண்ணலாம்பொறுத்துக்கணும்டிக்கெட் வாங்கி ரயிலேத்தி விட்டுடறேன்என கண்களில் நீர் மல்க உருகினார்!
திருநெல்வேலி ஜங்ஷனில் பட்டரும் மெய்க்காவலரும் வந்து வழியனுப்பினர்விழுப்புரத்துக்கு ரயிலேறிகாஞ்சிபுரம் வந்து சேர்ந்தார் கனபாடிகள்.

அன்றும் மடத்தில் ஆச்சார்யாளைத் தரிசிக்க ஏகக் கூட்டம்அனைவரும் நகரும் வரை காத்திருந்தார் கனபாடிகள்.

"வா ராமநாதாஉபன்யாசம் முடிச்சுட்டு இப்பதான் வரயாபேஷ்...பேஷ்உபன்யாசத்துக்கு நல்ல கூட்டமோசுத்துவட்டாரமே திரண்டு வந்ததோ?" என்று உற்சாகமாகக்கேட்டார் ஸ்வாமிகள்.

கனபாடிகள் கண்களில் நீர் முட்டியதுதழுதழுக்கும் குரலில் பெரியவாளிடம், "இல்லே பெரியவாஅப்படி எல்லாம்கூட்டம் வரல்லேஅந்த ஊர்லே ரெண்டு கோஷ்டிக்குள்ளே ஏதோ பிரச்னையாம் பெரியவாஅதனாலே கோயில் பக்கம் ஏழு  நாளும் யாருமே வல்லேஎன்று ஆதங்கப்பட்டார் கனபாடிகள்.

"சரி...பின்னே எத்தனை பேர்தான் கதையைக் கேக்க வந்தா?"

"ரெண்டே..ரெண்டு பேர்தான் பெரியவாஅதுதான் ரொம்ப வருத்தமா இருக்குஇது கனபாடிகள்.

உடனே பெரியவா, "இதுக்காகக் கண் கலங்கப்படாதுயார் அந்த ரெண்டு பாக்யசாலிகள்சொல்லேன்கேட்போம்என்றார்.

"வெளி மனுஷா யாரும் இல்லே பெரியவாஒண்ணுஅந்தக்கோயில் பட்டர்இன்னொண்ணு கோயில் மெய்க்காவலர்"என்று சொல்லி முடிப்பதற்குள்ஸ்வாமிகள் இடி இடியென்று வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

"ராமநாதா... நீ பெரிய பாக்யசாலிடாதேர்ல ஒக்காந்து கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன் ஒருத்தன்தான் கேட்டான்ஒனக்கு பாருரெண்டு பேர்வழிகள் கேட்டிருக்காகிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலிஎன்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

"அப்படின்னா பெரிய சம்பாவனை கெடச்சிருக்க வாய்ப்பில்லை என்ன?" என்றார் பெரியவா.

"அந்த பட்டர் ஒரு முப்பது ரூவாயும்மெய்க்காவல்காரர் ரெண்டேகால் ரூவாயும் சேர்த்து முப்பத்திரண்டே கால் ரூவாகெடச்சுது பெரியவா!" ; கனபாடிகள் தெரிவித்தார்.

"ராமநாதாநான் சொன்னதுக்காக நீ அங்கே போயி்ட்டு வந்தேஉன்னோட வேதப் புலமைக்கு நெறயப் பண்ணனும்இந்தச்சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்குஎன்று கூறிகாரியஸ்தரைக் கூப்பிட்டார் ஸ்வாமிகள்அவரிடம்கனபாடிகளு்க்குச் சால்வை போர்த்தி ஆயிரம் ரூபாய் பழத்தட்டில் வைத்துத் தரச் சொன்னார்.

"இதை சந்தோஷமா ஏத்துண்டு பொறப்படுநீயும் ஒன் குடும்பமும் பரம சௌக்கியமா இருப்பேள்என்று உத்தரவும் கொடுத்தார் ஸ்வாமிகள்.

கண்களில் நீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்து எழுந்த கனபாடிகளுக்குதான் ஸ்வாமிகளைப் பார்க்க எதற்காக வந்தோம் என்ற விஷயம் அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது."பெரியவாகிட்டே ஒரு பிரார்த்தனை... பெண் கல்யாணம் நன்னா நடக்கணும். "அதுக்கு...அதுக்கு..." என்று அவர் தயங்கவும்,"என்னுடைய ஆசீர்வாதம் பூர்ணமாக உண்டுவிவாகத்தை, சந்திரமௌலீஸ்வரர் ஜாம்ஜாம்னு நடத்தி வைப்பார்ஜாக்ரதையா ஊருக்குப் போய்ட்டு வா." என்று விடை கொடுத்தார் ஆச்சார்யாள்.

ரூபாய் பதினையாயிரம் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டு வாசலை அடையும் தனக்குமனைவியின் வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார் ராமநாத கனபாடிகள்.

"இருங்கோ,இருங்கோவந்துட்டேன் " உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின்  சந்தோஷக்  குரல்.. 
வாசலுக்கு வந்துகனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர்கொடுத்தாள்ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப் போனாள்காபி கொடுத்து ராஜ உபசாரம் பண்ணிவிட்டு, "இங்கே பூஜை ரூமுக்கு வந்து பாருங்கோஎன்று கனபாடிகளை அழைத்துப் போனாள்,

பூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள்.அங்கே ஸ்வாமிக்கு முன் ஒரு பெரிய மூங்கில் தட்டில்,பழ வகைகளுடன் புடவைவேஷ்டி இரண்டு திருமாங்கல்யம்மஞ்சள்குங்குமம்புஷ்பம் இவற்றுடன் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றும் இருந்தது.

"தாமு.. இதெல்லாம்..." என்று அவர் முடிப்பதற்குள்,, "காஞ்சிபுரத்துலேர்ந்து பெரியவா கொடுத்துட்டு வரச் சொன்னதா இன்னிக்குக் காத்தால மடத்தைச் சேர்ந்தவா கொண்டு வந்து வெச்சுட்டுப் போறா

"எதுக்கு?"னு கேட்டேன். "ஒங்காத்து பொண் கல்யாணத்துக்காகத்தான் பெரியவா சேர்ப்பிச்சுட்டு வரச்சொன்னா"னு சொன்னாஎன்று முடித்தாள் அவர் மனைவி.

கனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது. "தாமுபெரியவாளோட கருணையே கருணைநான் வாயத் திறந்து ஒண்ணுமே கேட்கலேஅப்படி இருந்தும் அந்தத் தெய்வம் இதையெல்லாம் அனுப்பியிருக்கு பாருஎன்று நா தழுதழுத்தவர்கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோஎன்றுகேட்டார்.  "நான் எண்ணிப் பார்க்கலேஎன்றாள் அவர் மனைவி.

கீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.

பதினைந்தாயிரம் ரூபாய்......!!!

அந்த தீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து "ஹோவென்று கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.